திருப்பூரில் குடியிருப்பு வாசிகள் ஆதார் அட்டைகளை ஒப்படைக்க முயற்சி - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

திருப்பூர் வீரபாண்டி அருகே வஞ்சி நகரில் 30 ஆண்டுகளாக வசிக்கும் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்கள் குடியிருப்புக்கு செல்லும் வழியை குடிசை மாற்று வாரியம் தடுப்பதாக கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் அட்டைகளை ஒப்படைக்க முயன்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள வஞ்சி நகர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 1050 மனைகள் தனியாரால் விற்பனை செய்யப்பட்டன. இந்த இடத்திற்கு 40 அடி அகலம் கொண்ட சாலை இருப்பதாக பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டதுடன், பஞ்சாயத்து ஒப்புதலும் பெறப்பட்டது. தற்போது இங்கு 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில், அந்த குடியிருப்புக்கு அருகில் குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சாலை அமைந்துள்ள இடம் சொந்தம் என கூறி வேலி அமைக்க முயற்சிப்பதாக குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டினர். இதனால், தாங்கள் அடுக்குமாடி குடியிருப்பு வழியாக சென்று பின்னர் தங்கள் குடியிருப்புக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வாகனங்கள் செல்ல முடியாத குறுகலான பாதை மட்டுமே உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.



இந்த பிரச்சினை தொடர்பாக பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற கோபத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை திரும்ப வழங்க முயன்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...