திருப்பூரில் குடியிருப்பு வாசிகள் ஆதார் அட்டைகளை ஒப்படைக்க முயற்சி - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

திருப்பூர் வீரபாண்டி அருகே வஞ்சி நகரில் 30 ஆண்டுகளாக வசிக்கும் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்கள் குடியிருப்புக்கு செல்லும் வழியை குடிசை மாற்று வாரியம் தடுப்பதாக கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் அட்டைகளை ஒப்படைக்க முயன்றனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம், வீரபாண்டி அருகே உள்ள வஞ்சி நகர் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 1050 மனைகள் தனியாரால் விற்பனை செய்யப்பட்டன. இந்த இடத்திற்கு 40 அடி அகலம் கொண்ட சாலை இருப்பதாக பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டதுடன், பஞ்சாயத்து ஒப்புதலும் பெறப்பட்டது. தற்போது இங்கு 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில், அந்த குடியிருப்புக்கு அருகில் குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சாலை அமைந்துள்ள இடம் சொந்தம் என கூறி வேலி அமைக்க முயற்சிப்பதாக குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டினர். இதனால், தாங்கள் அடுக்குமாடி குடியிருப்பு வழியாக சென்று பின்னர் தங்கள் குடியிருப்புக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வாகனங்கள் செல்ல முடியாத குறுகலான பாதை மட்டுமே உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.



இந்த பிரச்சினை தொடர்பாக பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற கோபத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை திரும்ப வழங்க முயன்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...

நீலாம்பூர் சாலையில் மாட்டு மண்டை ஓடுகள் குவியல்: கேரளாவில் இருந்து கழிவு கடத்தலா? பொதுமக்கள் அதிர்ச்சி

கோவை சின்னியம்பாளையம்-நீலாம்பூர் இணைப்புச் சாலையில் குவியல் குவியலாக மாட்டு மண்டை ஓடுகள் கொட்டப்பட்டுள்ளன. கேரளாவில் இரு...

கோவையில் ஸ்பீட் ரேடார் கேமராவுடன் போலீஸார் அதிரடி கண்காணிப்பு! 40 கி.மீ வேகத்தைக் கடந்தால் உடனடி அபராதம்

கோவை மாநகரில் அதிகரிக்கும் சாலை விபத்துகளைத் தடுக்க, அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் அதிநவீன வேகக் கண்காணிப்புக்...

பீளமேடு ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர்; நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்க ஒப்புதல்

பீளமேடு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் நடத்திய கருப்புக்கொடி போராட்டத்தை தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் Panan Lal உ...

கோவையில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

கோவை சிங்காநல்லூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த கூலித் தொழிலாளி வேலுச்சாமி என்பவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

கோவையில் ரூ.40,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் வசூலிப்பாளர் கைது

கோவை மாநகராட்சியின் பெண் பில் வசூலிப்பாளர் Yamuna Devi, காலி நில வரி தொடர்பான அனுமதிக்காக ரூ.40,000 லஞ்சம் வாங்கிய குற்ற...