சாதி மறுப்பு திருமணம் செய்யும் இணையர்களைப் பாதுகாக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவையில் சமூக, ஜனநாயக மற்றும் மனித உரிமை இயக்கங்கள் சாதி மறுப்பு திருமணம் செய்யும் இணையர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தன. சிறப்பு பிரிவு அமைக்க வலியுறுத்தினர்.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சமூக, ஜனநாயக மற்றும் மனித உரிமை இயக்கங்கள் ஒன்றிணைந்து, சாதி மறுப்பு திருமணம் செய்யும் இணையர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளைத் தடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்த கூட்டமைப்பு "சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான கூட்டியக்கம்" என்ற பெயரில் செயல்படுகிறது. தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருட்டிணன் இதன் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.



தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கொலை உள்ளிட்ட குற்றங்களில் சாதி மறுப்பு திருமணம் மற்றும் காதல் முக்கிய காரணிகளாக உள்ளன என்று சுட்டிக்காட்டிய இவர்கள், சாதி மறுப்பு திருமணம் புரியும் இணையர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களை தடுக்க மாநில அரசு உடனடியாக ஒரு சிறப்பு தனிப்பிரிவை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த சிறப்பு பிரிவு செயல்பட வேண்டிய முறை குறித்தும் அவர்கள் பரிந்துரைகளை முன்வைத்தனர். அதன்படி:

1. தொலைபேசி மூலம் பெறப்படும் புகார்கள் உடனடியாக முதல் தகவல் அறிக்கையாக தானியங்கி முறையில் பதிவு செய்யப்பட வேண்டும்.

2. பதிவு செய்யப்பட்ட புகார் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

3. புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4. காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த சிறப்பு பிரிவின் செயல்பாடுகளை கண்காணித்து, அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

5. சிறப்பு பிரிவானது தனது தேவைக்கேற்ப ஆலோசனை வழங்குபவர்களை எவ்வித தடையுமின்றி நியமிக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

இவற்றுடன் பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சாதி மறுப்பு திருமணம் செய்யும் இணையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே இந்த மனுவின் முக்கிய நோக்கமாகும்.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...