சாதி மறுப்பு திருமணம் செய்யும் இணையர்களைப் பாதுகாக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவையில் சமூக, ஜனநாயக மற்றும் மனித உரிமை இயக்கங்கள் சாதி மறுப்பு திருமணம் செய்யும் இணையர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தன. சிறப்பு பிரிவு அமைக்க வலியுறுத்தினர்.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சமூக, ஜனநாயக மற்றும் மனித உரிமை இயக்கங்கள் ஒன்றிணைந்து, சாதி மறுப்பு திருமணம் செய்யும் இணையர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளைத் தடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்த கூட்டமைப்பு "சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான கூட்டியக்கம்" என்ற பெயரில் செயல்படுகிறது. தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருட்டிணன் இதன் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.



தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கொலை உள்ளிட்ட குற்றங்களில் சாதி மறுப்பு திருமணம் மற்றும் காதல் முக்கிய காரணிகளாக உள்ளன என்று சுட்டிக்காட்டிய இவர்கள், சாதி மறுப்பு திருமணம் புரியும் இணையர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களை தடுக்க மாநில அரசு உடனடியாக ஒரு சிறப்பு தனிப்பிரிவை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த சிறப்பு பிரிவு செயல்பட வேண்டிய முறை குறித்தும் அவர்கள் பரிந்துரைகளை முன்வைத்தனர். அதன்படி:

1. தொலைபேசி மூலம் பெறப்படும் புகார்கள் உடனடியாக முதல் தகவல் அறிக்கையாக தானியங்கி முறையில் பதிவு செய்யப்பட வேண்டும்.

2. பதிவு செய்யப்பட்ட புகார் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

3. புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

4. காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த சிறப்பு பிரிவின் செயல்பாடுகளை கண்காணித்து, அதன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

5. சிறப்பு பிரிவானது தனது தேவைக்கேற்ப ஆலோசனை வழங்குபவர்களை எவ்வித தடையுமின்றி நியமிக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

இவற்றுடன் பல்வேறு கோரிக்கைகளையும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சாதி மறுப்பு திருமணம் செய்யும் இணையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே இந்த மனுவின் முக்கிய நோக்கமாகும்.

Newsletter

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...