கோவையில் பழைய மின் இணைப்புகளில் ஆர்சிடி கருவி பொருத்த அறிவுறுத்தல்

கோவையில் மின் விபத்துகளைத் தடுக்க பழைய மின் இணைப்புகளில் ஆர்சிடி கருவி பொருத்த மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் மின் பாதுகாப்பு குறித்த முக்கிய அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் மா. சுப்ரமணியன் அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மின் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவதாகவும், இது மின்நுகர்வோரின் அறியாமையால் ஏற்படும் விபத்துகளாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது புதிய மின் இணைப்புகள் ஆர்.சி.டி. நவீன உபகரணம் பொருத்தி வழங்கப்படுவதாகவும், இந்த ஆர்.சி.டி. உபகரணம் மின் இணைப்பில் ஏதாவது மின்கசிவு ஏற்பட்டால் உடனடியாக மின் துண்டிப்பை ஏற்படுத்தி நுகர்வோரை மின் விபத்தில் இருந்து பாதுகாக்கும் கருவி என்றும் அவர் விளக்கியுள்ளார்.

ஆர்.சி.டி. கருவி பொருத்தப்படாத பழைய மின் இணைப்புகளில் அதை பொருத்தி மின் நுகர்வோர் தங்களது குடும்பங்களைப் பாதுகாக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், மரம் மற்றும் மரக்கிளைகளை பொதுமக்கள் வெட்டும்போது அருகில் மின்சார கம்பிகள் அல்லது மின் இணைப்பு ஒயர்கள் செல்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மின்சார கம்பிகள் செல்லும் பட்சத்தில் அருகில் உள்ள மின்சார அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்த பின்னரே அப்பணிகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இயற்கை சீற்றம் காரணமாக மரக்கிளைகள் அருகில் செல்லும் மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அவற்றை அகற்ற முயற்சி செய்யாமல், அந்தப் பகுதிக்குள்பட்ட உதவி பொறியாளர் அல்லது மின்வாரிய பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இறுதியாக, ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட மின் சாதனங்களை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் மேற்பார்வை பொறியாளர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...