கோவையில் பழைய மின் இணைப்புகளில் ஆர்சிடி கருவி பொருத்த அறிவுறுத்தல்

கோவையில் மின் விபத்துகளைத் தடுக்க பழைய மின் இணைப்புகளில் ஆர்சிடி கருவி பொருத்த மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் மின் பாதுகாப்பு குறித்த முக்கிய அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் மா. சுப்ரமணியன் அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மின் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவதாகவும், இது மின்நுகர்வோரின் அறியாமையால் ஏற்படும் விபத்துகளாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது புதிய மின் இணைப்புகள் ஆர்.சி.டி. நவீன உபகரணம் பொருத்தி வழங்கப்படுவதாகவும், இந்த ஆர்.சி.டி. உபகரணம் மின் இணைப்பில் ஏதாவது மின்கசிவு ஏற்பட்டால் உடனடியாக மின் துண்டிப்பை ஏற்படுத்தி நுகர்வோரை மின் விபத்தில் இருந்து பாதுகாக்கும் கருவி என்றும் அவர் விளக்கியுள்ளார்.

ஆர்.சி.டி. கருவி பொருத்தப்படாத பழைய மின் இணைப்புகளில் அதை பொருத்தி மின் நுகர்வோர் தங்களது குடும்பங்களைப் பாதுகாக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும், மரம் மற்றும் மரக்கிளைகளை பொதுமக்கள் வெட்டும்போது அருகில் மின்சார கம்பிகள் அல்லது மின் இணைப்பு ஒயர்கள் செல்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மின்சார கம்பிகள் செல்லும் பட்சத்தில் அருகில் உள்ள மின்சார அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்த பின்னரே அப்பணிகளை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இயற்கை சீற்றம் காரணமாக மரக்கிளைகள் அருகில் செல்லும் மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அவற்றை அகற்ற முயற்சி செய்யாமல், அந்தப் பகுதிக்குள்பட்ட உதவி பொறியாளர் அல்லது மின்வாரிய பணியாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இறுதியாக, ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட மின் சாதனங்களை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் மேற்பார்வை பொறியாளர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...