சரவணம்பட்டியில் போக்கியத்துக்கு வீடு தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி

கோவை சரவணம்பட்டியில் போக்கியத்துக்கு வீடு தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


Coimbatore: கோவை சரவணம்பட்டி தச்சன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் (56) மற்றும் அவரது மனைவி குணசுந்தரி (54) ஆகியோர் போக்கியத்துக்கு வீடு தேடி வந்தனர். அப்போது, கோவை தெற்கு அருணாசலம் காலனியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் சரவணம்பட்டி மஹா நகரில் உள்ள வீட்டை போக்கியத்துக்கு விடுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, குணசுந்தரி ஏப்ரல் 24-ஆம் தேதி ராஜசேகரிடம் ரூ.10 லட்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட ராஜசேகர் வீட்டை ஒப்படைக்கவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக குணசுந்தரி ஜூலை 4-ஆம் தேதி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...