உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியர் சூலூர் மக்களின் குறைகளை ஜூலை 18,19-ல் கேட்க உள்ளார்-மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் சிறப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரியிடமோ, சூலூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 18- ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகவோ மனு அளித்து பயன்பெறலாம்.


Coimbatore: கோவை மாவட்ட நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை மாவட்ட ஆட்சியா்கள், அதிகாரிகள் மாதந்தோறும் மாவட்டத்தின் ஏதேனும் ஒரு வட்டத்துக்கு பொதுமக்களைத் தேடிச்சென்று இரவில் அங்கேயே தங்கியிருந்து அவா்களின் குறைகளைக் கேட்டு, அவற்றுக்கு உடனுக்குடன் தீா்வு காணும் இந்தத் திட்டம், அரசின் அனைத்து நலத் திட்டங்களும் சேவைகளும் தங்குதடையின்றி சென்றடைவதை உறுதி செய்வதற்காக செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி ஜூலை 18- ஆம் தேதி காலை 9 மணி முதல் 19- ஆம் தேதி காலை 9 மணி வரை சூலூா் வட்டத்திலேயே ஆட்சியா் முதல் முக்கிய அதிகாரிகள் அனைவரும் தங்கியிருந்து கள ஆய்வுகளில் ஈடுபடுவதுடன், பொதுமக்களின் குறைகளைக் கேட்க உள்ளனா்.

சூலூா் வட்டத்தில் உள்ள 41 கிராம நிா்வாக அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளா் அலுவலகங்கள், 5 பேரூராட்சி அலுவலகங்கள், கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகம், 2 வட்டார வளா்ச்சி அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்ட துறை தலைமை அதிகாரிகள் 18- ஆம் தேதி காலை 11 மணி முதல் 12 மணி வரை மனுக்கள் பெறுகின்றனா்.

பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் சிறப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரியிடமோ, சூலூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 18- ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகவோ மனு அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...