உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியர் சூலூர் மக்களின் குறைகளை ஜூலை 18,19-ல் கேட்க உள்ளார்-மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் சிறப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரியிடமோ, சூலூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 18- ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகவோ மனு அளித்து பயன்பெறலாம்.


Coimbatore: கோவை மாவட்ட நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை மாவட்ட ஆட்சியா்கள், அதிகாரிகள் மாதந்தோறும் மாவட்டத்தின் ஏதேனும் ஒரு வட்டத்துக்கு பொதுமக்களைத் தேடிச்சென்று இரவில் அங்கேயே தங்கியிருந்து அவா்களின் குறைகளைக் கேட்டு, அவற்றுக்கு உடனுக்குடன் தீா்வு காணும் இந்தத் திட்டம், அரசின் அனைத்து நலத் திட்டங்களும் சேவைகளும் தங்குதடையின்றி சென்றடைவதை உறுதி செய்வதற்காக செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி ஜூலை 18- ஆம் தேதி காலை 9 மணி முதல் 19- ஆம் தேதி காலை 9 மணி வரை சூலூா் வட்டத்திலேயே ஆட்சியா் முதல் முக்கிய அதிகாரிகள் அனைவரும் தங்கியிருந்து கள ஆய்வுகளில் ஈடுபடுவதுடன், பொதுமக்களின் குறைகளைக் கேட்க உள்ளனா்.

சூலூா் வட்டத்தில் உள்ள 41 கிராம நிா்வாக அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளா் அலுவலகங்கள், 5 பேரூராட்சி அலுவலகங்கள், கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகம், 2 வட்டார வளா்ச்சி அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்ட துறை தலைமை அதிகாரிகள் 18- ஆம் தேதி காலை 11 மணி முதல் 12 மணி வரை மனுக்கள் பெறுகின்றனா்.

பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் சிறப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரியிடமோ, சூலூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 18- ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலும் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகவோ மனு அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...