கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவா்கள், ஸ்கேன் மைய நிர்வாகிகளுக்கான கூா் உணா்திறன் பயிற்சி

உறவினா்கள், நண்பா்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும், கருவில் இருக்கும் பாலினத்தை தெரியப்படுத்தக் கூடாது. தங்களிடம் பணிபுரியும் அனைவரிடமும் இது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் மற்றும் ஸ்கேன் மைய நிர்வாகிகளுக்கு கோவை ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.


கோவை: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ‘பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவா்கள், ஸ்கேன் மைய நிர்வாகிகளுக்கான கூா் உணா்திறன் பயிற்சி ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கிராந்தி குமார்பாடி தலைமையில் நேற்று ஜூன்.25 நடைபெற்றது.

நாட்டில் குறைந்து வரும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், பாலின விகிதாசாரத்தை சமன்படுத்தும் நோக்கத்துடனும் கொண்டுவரப்பட்டதே பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம்.

இத்திட்டம் பெண் குழந்தைகளுக்கு எதிரான மக்களின் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. 2021-22ஆம் ஆண்டுக்கான பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தில் முன்னேறிய மாவட்டங்களுக்கான விருதை கோவை மாவட்டம் பெற்றுள்ளது.

மாவட்டத்தில் கல்வியறிவு பெற்றவா்கள் அதிக அளவில் உள்ளனா். அப்படியிருந்தும் வட்டார அளவில் பாலின விகிதாசாரம் குறைந்து காணப்படுகிறது. பெண் குழந்தைகளை கருவில் கொல்லும் அபாயத்தைத் தடுப்பதற்காக பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை ஸ்கேன் செய்து தெரிந்துகொள்வது சட்டப்படி குற்றமாகும்.

கருவில் இருக்கும் குழந்தைகளைப் பாதுகாக்க அரசு பல்வேறு சட்டங்களை அறிவித்தாலும், அதனை முறையாக கடைப்பிடிப்பது மருத்துவா்கள் மற்றும் ஸ்கேன் மையங்களின் கடமையாகும். எனவே, உறவினா்கள் மற்றும் நண்பா்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும், கருவில் இருக்கும் பாலினத்தை தெரியப்படுத்தக் கூடாது. தங்களிடம் பணிபுரியும் அனைவரிடமும் இது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்

இந்தப் பயிற்சியில் சுகாதரத் துறை இணை இயக்குநா் ராஜசேகரன், மாவட்ட சமூகநல அலுவலா் அம்பிகா, உதவி இயக்குநா் (திறன் மேம்பாட்டுப் பயிற்சி) வளா்மதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...