கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

இந்த ஆண்டு முதுநிலைப் படிப்புகளுக்கு மொத்தம் 2330 விண்ணப்பதாரர்களும், முனைவர் பட்டப் படிப்புகளுக்கு 380 மாணவர்களும் தங்களின் பாட விருப்பத்தின்படி பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பித்து இன்று நடைபெற்ற முதுகலை நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முதுகலை பட்ட மேற்படிப்பு பயிலகம் 11 தொகுப்பு கல்லூரிகளில் 33 முதுகலை மற்றும் 28 முனைவர் பட்டப் படிப்பை வழங்குகிறது. துணைவேந்தர் கீதாலட்சுமி மே 7, 2024 அன்று வேளாண்மை, தோட்டக்கலை. வேளாண் பொறியியல், வனவியல் மற்றும் சமூக அறிவியல் சேர்க்கைக்கான இணையதளத்தினை தொடங்கினார்.

இந்த ஆண்டு முதுநிலைப் படிப்புகளுக்கு மொத்தம் 2330 விண்ணப்பதாரர்களும், முனைவர் பட்டப் படிப்புகளுக்கு 380 மாணவர்களும் தங்களின் பாட விருப்பத்தின்படி பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பித்து 23 ஜூன் 2024 அன்று நடைபெற்ற முதுகலை நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டனர். 



இந்த நுழைவுத் தேர்வில் ஆத்திரப் பிரதேசம், கேரண, ஈர்நாடகா, மகாராஷ்ட்ரா, ஒடிசா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம், மேகாலயா, அசாம், தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்த தேர்வு பல்கலைக்கழகத்தின் 33 தேர்வு அரங்குகள் மற்றும் விரிவுரை அரங்குகளில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் 50 நிர்வாக பணியாளர்கள் மூலம் நடத்தப்பட்டது. தேர்வு நடைபெறும் பல்வேறு அரங்குகளைக் கண்டறிய கூகுள் வரைபடத்துடன் இணைக்கப்பட்ட QR குறியீடுகள், உருவாக்கப்பட்டு

காட்டப்பட்டிருந்தது.

மேற்கண்ட தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கான சேர்க்கை வரும் செப்டம்பர் 2024 இல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...