கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

இந்த ஆண்டு முதுநிலைப் படிப்புகளுக்கு மொத்தம் 2330 விண்ணப்பதாரர்களும், முனைவர் பட்டப் படிப்புகளுக்கு 380 மாணவர்களும் தங்களின் பாட விருப்பத்தின்படி பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பித்து இன்று நடைபெற்ற முதுகலை நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முதுகலை பட்ட மேற்படிப்பு பயிலகம் 11 தொகுப்பு கல்லூரிகளில் 33 முதுகலை மற்றும் 28 முனைவர் பட்டப் படிப்பை வழங்குகிறது. துணைவேந்தர் கீதாலட்சுமி மே 7, 2024 அன்று வேளாண்மை, தோட்டக்கலை. வேளாண் பொறியியல், வனவியல் மற்றும் சமூக அறிவியல் சேர்க்கைக்கான இணையதளத்தினை தொடங்கினார்.

இந்த ஆண்டு முதுநிலைப் படிப்புகளுக்கு மொத்தம் 2330 விண்ணப்பதாரர்களும், முனைவர் பட்டப் படிப்புகளுக்கு 380 மாணவர்களும் தங்களின் பாட விருப்பத்தின்படி பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பித்து 23 ஜூன் 2024 அன்று நடைபெற்ற முதுகலை நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டனர். 



இந்த நுழைவுத் தேர்வில் ஆத்திரப் பிரதேசம், கேரண, ஈர்நாடகா, மகாராஷ்ட்ரா, ஒடிசா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம், மேகாலயா, அசாம், தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்த தேர்வு பல்கலைக்கழகத்தின் 33 தேர்வு அரங்குகள் மற்றும் விரிவுரை அரங்குகளில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் 50 நிர்வாக பணியாளர்கள் மூலம் நடத்தப்பட்டது. தேர்வு நடைபெறும் பல்வேறு அரங்குகளைக் கண்டறிய கூகுள் வரைபடத்துடன் இணைக்கப்பட்ட QR குறியீடுகள், உருவாக்கப்பட்டு

காட்டப்பட்டிருந்தது.

மேற்கண்ட தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கான சேர்க்கை வரும் செப்டம்பர் 2024 இல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...