கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

30 வருடங்கள் பணி முடிந்த ஊழியர்களுக்கு நிலுவையுடன் கூடிய பணப்பயன்களை உடனே அறிவித்திட வேண்டும் என பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.


Coimbatore: தமிழக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று ஜூன்.21 ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



சத்துணவு திட்டத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 9,000 ரூபாய் அகவிலை படியுடன் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர் பணியிலிருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடையாக பணி ஓய்வு நாளில் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.



காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து சத்துணவு மையங்களிலும் விரிவுபடுத்தி சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். 30 வருடங்கள் பணி முடிந்த ஊழியர்களுக்கு நிலுவையுடன் கூடிய பணப்பயன்களை உடனே அறிவித்திட வேண்டும் என பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...