கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

30 வருடங்கள் பணி முடிந்த ஊழியர்களுக்கு நிலுவையுடன் கூடிய பணப்பயன்களை உடனே அறிவித்திட வேண்டும் என பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.


Coimbatore: தமிழக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று ஜூன்.21 ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



சத்துணவு திட்டத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 9,000 ரூபாய் அகவிலை படியுடன் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர் பணியிலிருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடையாக பணி ஓய்வு நாளில் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.



காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து சத்துணவு மையங்களிலும் விரிவுபடுத்தி சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். 30 வருடங்கள் பணி முடிந்த ஊழியர்களுக்கு நிலுவையுடன் கூடிய பணப்பயன்களை உடனே அறிவித்திட வேண்டும் என பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...