காவல்துறையும் ஆளும் கட்சியினரும் இணைந்தே குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடையினை அமைக்கின்றனர்- மக்கள் அதிகாரம் புகார்


திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த செவ்வாயன்று அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் இணைந்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சம்பவயிடத்திற்கு வந்த கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜன் தலைமையிலான காவல்துறையினர் பெண்கள் என்றும் பாராமல் கண்மூடித்தனமாக தாக்கினர்.

இதில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் அமைதியான முறையில் கலைந்து சென்ற நிலையில் ஒரு பெண்ணை கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜன் கடுமையாக தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



இதுகுறித்து, கோவை காந்திபுரம் பகுதியில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் கூறுகையில், குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாமளாபுரம் பகுதி பெண்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், காவல்துறையினர் பெண்கள் என்றும் கூட பார்க்காமல் கடுமையாக தாக்கினர். பல ஆண்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டது. 

தொடர்ந்து, அடுத்த அதிகாலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோரை அத்துமீறி கைது செய்தனர். அதில் 7 பேரை விசாரணையின் அடிப்படையில் காவலில் வைத்துள்ளனர். 20 பேரை பல்லடம் ரைஸ் மில் பகுதியில் சட்டவிரோதமாக பிணைக் கைதிகளாக அடைத்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில், டாஸ்மாக் மூலம் அரசியல் கட்சியினர், அதிகாரிகளுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. அவினாசி தொகுதி எம்எல்ஏ-வே காவல்துறையை ஏவி மக்கள் மீது இந்த கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார் என தெரியவருகிறது. 

தாமிழகம் முழுவதும் 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட நிலையில் அந்த கடைகளை குடியிருப்பு பகுதியில் அமைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மக்கள் அதிகாரம் 2015 முதலே இதுகுறித்தான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. காவல் துறை மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் முக்கியத்துவம் அளிப்பது இல்லை. அரசியல் கட்சிகளும், காவல்துறையினரும் இணைந்தே கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்ந்து, இறுதி டாஸ்மாக் கடை இருக்கும் வரை மக்கள் அதிகாரம் போராடும்" என தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...