கோவையின் பல்வேறு பகுதிகளில் பைக் வீலிங் - அச்சுறுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

பைக் வீலிங் செய்து அச்சுறுத்தும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவையில் திருச்சி சாலை, அவினாசி சாலை, ரேஸ்கோர்ஸ், கொடிசியா உள்ளிட்ட பகுதிகளில் வலம் வரும் சில பைக்கர்கள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதமாக திடீரென வீலிங் செய்து, பைக்கில் சாகசங்கள் செய்து அட்டகாசத்தில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் செய்யும் அட்டகாசங்களை வீடியோவாக பதிவு செய்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் c_l_u_t_c_h__breaker என்ற பெயரில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

மேலும் போலீசாரிடம் இருந்து தப்பிக்க பைக்குளில் இருந்து நம்பர் பிளேட்டை அகற்றி விடுகின்றனர். முகத்தை முழுவதுமாக மறைக்கும் வகையில் மாஸ்க் அணிந்து கொள்கின்றனர்.

சாகசங்கள் செய்ய ஏற்ற இடங்களைத் தேர்வு செய்யாமல், பொது இடங்களில் சேட்டைகள் செய்து மக்களை அச்சுறுத்தும் நபர்களை கோவை மாநகர போலீசார் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். பிறர் உயிரோடு விளையாடும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் ஜூன்.20 கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...

வீ த லீடர்ஸ் சார்பில் போதை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக டர்ஃப் கிரிக்கெட் போட்டி

வீ த லீடர்ஸ் பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்ப...

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...