தமுமுகவிற்கு சமூக சேவைக்கான விருது

கோவை கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற எம்.டி.ஏ மிஷினரி ட்ரேடர்ஸ் அசோசியேசன் பொதுக்குழுவில் தமுமுகவிற்கு சமூக சேவைக்கான விருது வழங்கப்பட்டது.


கோவை: கோவை எம்.டி.ஏ. மிஷினரி ட்ரேடர்ஸ் அசோசியேசன் சார்பில், கோவை கிராண்ட் ஹோட்டலில் இன்று ஜூன்.13 நடைபெற்ற 9-வது பொதுக்குழுவில் சமூக சேவைக்கான விருதுகள் தமுமுகவின் சேவைகளை பாராட்டி விருது வழங்கப்பட்டது.

எம்.டி.ஏ. அசோசியேசன் தலைவர் பிரோஸ் காண் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறந்த சமூக சேவைக்கான விருதுகள் வருடம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) கோவை மத்திய மாவட்டத்துக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து மருத்துவ பணிகள், ரத்ததான முகாம்கள், ஆம்புலன்ஸ் சேவை மருத்துவ உதவிகள், கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதற்கு தமுமுகவை கவுரவப்படுத்தி இந்த விருதுகள் வழங்கப்பட்டது.

இதை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் கோவை சர்புதீன், தமுமுக மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான், மமக மாவட்ட செயலாளர் இப்ராகிம் அவர்கள், மாநில தொண்டரணி துணைச் செயலாளர் ஷகீர், மாவட்டத் துணைச் செயலாளர்கள் அசாருதீன், ஆசிக் அகமது, மருத்துவ சேவையின் மாவட்ட செயலாளர் சபீர், மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் இப்ராஹிம், ஆகியோர்கள் கலந்து கொண்டு விருதுகளை வாங்கினார்கள்.

இதில் சிறப்பு விருந்தினர் கே ஜி ராமமூர்த்தி, மற்றும் சங்கத்தின் தலைவர் பிரஸ் காண், துணைத் தலைவர் ஜெம் பாபு, நிஜாமுதீன், மற்றும் சங்கத்தின் தலைவர் பிரஸ் காண், துணைத் தலைவர் ஜெம் பாபு, நிஜாமுதீன், மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் ஆண்கள் பெண்கள் என 200-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...