கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரில் முன்வைக்கலாம்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (25.08.2026) செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு குறைகளுக்கு தீர்வு காண இந்த கூட்டத்தில் பங்கேற்கலாம். பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதிகள், தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை பிரச்சினைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை மேயரிடம் நேரடியாக முன்வைக்கலாம்.

மேலும், தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி தொடர்பான விவகாரங்கள், புதிய குடிநீர் இணைப்பு கோரிக்கைகள், பெயர் திருத்தம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு இக்கூட்டத்தில் தீர்வு காணலாம். மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்களால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS கேட்டுக்கொண்டுள்ளார். மக்களின் குறைகளை நேரடியாக கேட்டு தீர்வு காணும் நோக்கில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...