கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மரபு அடிப்படையில் நடைபெற்றது. இசை அர்ப்பணம் மற்றும் நாட்டிய அர்ப்பணத்துடன் மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்திய பண்பாடு மற்றும் பாரம்பரியத்தின் சிறப்பு வெளிப்படுத்தப்பட்டது.


Coimbatore: கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் கலை நிகழ்த்துத் துறையின் கீழ் இயங்கி வரும் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில், இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்திய அறிவு மரபின் சிறப்பையும், கலை, ஆன்மிகம் மற்றும் பண்பாட்டின் ஒருங்கிணைப்பையும் வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்தது.



இந்நிகழ்வில் கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் நிறுவனத்தின் தலைவர் Dr. R. வசந்தகுமார் தலைமை வகித்தார். கலை நிகழ்த்துத் துறையின் புல முதல்வர் Dr. ஜனக மாயாதேவி வரவேற்புரையாற்றினார். இசைத்துறை மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

இசைத்துறையின் சார்பில் இசை அர்ப்பணம் மற்றும் நடனத்துறையின் சார்பில் நாட்டிய அர்ப்பணம் சிறப்பாக நடைபெற்றன. மாணவர்களுக்கு Dr. ஜனக மாயாதேவி மற்றும் நடனத்துறை உதவிப்பேராசிரியர் Dr. J. இந்துமதி ஆகியோர் பயிற்சி அளித்து, நிகழ்ச்சிக்காக அவர்களை சிறப்பாக வழிநடத்தினர்.

மேலும், இசைத்துறைப் பேராசிரியர்களான Dr. பிரசீதா பால், C. மீரா பிரியதர்ஷினி, R. ஸ்ருதிலயா மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் T. துர்க்கா ஆகியோரின் வழிகாட்டுதலுடன், இசைத்துறை மாணவர்களால் வரலட்சுமி பூஜைக்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் தலைவர் Dr. R. வசந்தகுமார் சிறப்புரையாற்றினார். கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி K. முருகையா, கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் துணைவேந்தர் Dr. S. ரவி, பதிவாளர் Dr. P.V. பிரதீப் ஆகியோர் சிறப்புரையாற்றி நிகழ்வைச் சிறப்பித்தனர்.

வரலட்சுமி பூஜையின் முக்கியத்துவம், இந்தியப் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில் அதன் சிறப்பு ஆகியவை எடுத்துரைக்கப்பட்டன. மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் நிறைவாக, இசைத்துறைத் தலைவர் மற்றும் உதவிப்பேராசிரியர் Dr. சஜிதா சுகு P. நன்றியுரை வழங்கினார். தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்வு Indian Knowledge System-ன் சிறப்பையும், கலை, ஆன்மிகம் மற்றும் பண்பாட்டின் ஒருங்கிணைப்பையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்ததாக அனைவராலும் பாராட்டப்பட்டது.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...