கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 2030-ஆம் ஆண்டுக்குள் வெறிநோய் இல்லாத நிலையை அடைவதை இலக்காகக் கொண்டு மாநகராட்சி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் சமூக நாய்களுக்கான வெறிநோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று (22.08.2026) மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் சுமார் 700 சமூக நாய்களுக்கு Anti-Rabies Vaccination (ARV) செலுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 1,11,074 சமூக நாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நடப்பு மாதத்தில் இதுவரை சுமார் 8,000 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சமூக நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இன்றைய தினம் நடைபெற்ற முகாமில் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளான 36, 37, 38 ஆகிய பகுதிகளிலும், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளான 8 மற்றும் 54 ஆகிய பகுதிகளிலும் உள்ள சுமார் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகபட்ச எண்ணிக்கையிலான சமூக நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி, வெறிநோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மேலும், வெறிநோய் தடுப்பு நடவடிக்கைகளுடன், விலங்குகளின் பிறப்பு கட்டுப்பாடு (ABC), தொடர்ச்சியான தடுப்பூசி பணிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதன் மூலம், "ஒருங்கிணைந்த நலன் One Health" என்ற அணுகுமுறையில் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது.

எதிர்வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் வெறிநோய் இல்லாத நிலையை (Zero Rabies by 2030) அடைவதை இலக்காகக் கொண்டு, கோவை மாநகராட்சி தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...