கோவை ஆர்.வி.ரவுண்டானா பகுதியில் பஸ்ஸில் ஐடி பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்ட கிளீனர் கைது

ஆர்.வி.ரவுண்டானா பகுதியில் பஸ்லில் இருந்து பயணிகள் இறங்கிகொண்டிருந்தபோது, ஐடி பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்ட ஆம்னி பேருந்தின் கிளீனர் சுபாஷ் சந்திர போசை காவல்துறையினர் கைது செய்தனர்.


கோவை: விருதுநகர் ஆம்னி பேருந்து நேற்று முன்தினம் கோவை நோக்கி வந்தது. பஸ்ஸில் சரவணம்பட்டி ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் கண்மணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் ஊழியரும் பயணம் செய்தார்.

இந்த நிலையில் நேற்று மே.29 காலை கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை அருகில் ஆர்.வி.ரவுண்டானா பகுதியில் பயணிகள் இறங்கி கொண்டிருந்தனர்.

அப்போது கிளீனர் ஆக பணியாற்றி வரும் மாயவரம் மஞ்சில்குடி பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் (41) என்பவர் ஐடி பெண் ஊழியரிடம் தவறாக நடந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இது குறித்து அவர் தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் கிளீனர் சுபாஷ் சந்திரபோஸை கணவர் மற்றும் சக பயணிகள் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் இறங்க உதவி செய்வதற்காகத்தான் கையை நீட்டியதாக கூறினார். இதை ஏற்காத அவர்கள் அவரை சத்தம் போட்டனர். ஆனால் அவர்களை மிரட்டிய அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

பின்னர் இது குறித்து ஐடி பெண் ஊழியர் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஐயாசாமி பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆம்னி பஸ் கிளீனர் சுபாஷ் சந்திர போசை கைது செய்தனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...