நீலகிரி தேயிலை விவசாயிகளுக்கு வசதியாக குறுஞ்செய்தி சேவை துவக்கம்


இந்தியப் பிரதமர் மோடியின் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் படி, நீலகிரி தேயிலை வாரியம் சார்பில் சிறு தேயிலை விவசாயிகள் பயனடையும் வகையில் புதிதாக குறுஞ்செய்தி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் இத்திட்டத்தினை துவக்கி வைத்து பேசுகையில், நீலகிரி தேயிலை வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 25 ஆயிரம் சிறிய தேயிலை விவசாயிகளுக்கு மாதத்திற்கு 5 முறை என குறுஞ்செய்தி அனுப்பப்படும். இதனால், விவசாயிகள் சந்தை நிலவரம் உள்ளிட்டவற்றை அறிந்துகொண்டு பயனடையலாம்" என்றார்.



இதுகுறித்து, தேயிலை வாரிய நிர்வாக இயக்குனர் பால்ராசு கூறுகையில், இத்திட்டத்தின் கீழ் தேயிலை விவசாயிகளுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் மூலம், பச்சை இலை விலை நிலவரம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, தர பராமரிப்பு மற்றும் மானியங்கள், சராசரி விலை உள்ளிட்ட முக்கிய குறிப்புகளை தெரிந்துகொள்ளலாம் என்றார்.

தேயிலை வாரிய துணை இயக்குனர் ஹரிபிரகாஷ் நாயர் கூறுகையில், இந்த குறுஞ்செய்தி அனுப்பும் திட்டத்தின் மூலம் வங்கி உடன் சிறிய விவசாயிகள் இணைக்கப்பட்டு அவர்களுக்கு உதவ திட்டமிடப்பட்டுள்ளது என்றார். 

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் சரியான காலத்தில் தங்களது பணியினை செய்து லாபம் மற்றும் உற்பத்தியினை அதிகரிக்க முடியும் என தேயிலை வாரிய துணைத் தலைவர் டி.ஹெக்டே தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...