கோவை ஆர்.ஜி.நகரில் தொழிற்சாலை உரிமையாளர் தற்கொலை

துடைப்பம் தயாரிக்கும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தொழிற்சாலை உரிமையாளர் ரவீந்திரன் எலி மருந்து பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை, ரத்தினபுரி அருகே உள்ள கண்ணப்பா நகர், ஆர் ஜி.நகரைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (43). இவர் துடைப்பம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே, தொழிற்சாலையை மூடிவிட்டு துபாய்க்கு வேலைக்கு செல்வதற்காக முயற்சி செய்தார். இந்நிலையில் நேற்று மே.26 மாலை வீட்டில் ரவீந்திரன் எலியை ஒழிக்க பயன்படும் எலி மருந்து பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ஸ்ரீஜா, உடனடியாக அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

பின்னர் இது குறித்து ஸ்ரீஜா ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...