கோவை ஆர்.ஜி.நகரில் தொழிற்சாலை உரிமையாளர் தற்கொலை

துடைப்பம் தயாரிக்கும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தொழிற்சாலை உரிமையாளர் ரவீந்திரன் எலி மருந்து பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை, ரத்தினபுரி அருகே உள்ள கண்ணப்பா நகர், ஆர் ஜி.நகரைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (43). இவர் துடைப்பம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே, தொழிற்சாலையை மூடிவிட்டு துபாய்க்கு வேலைக்கு செல்வதற்காக முயற்சி செய்தார். இந்நிலையில் நேற்று மே.26 மாலை வீட்டில் ரவீந்திரன் எலியை ஒழிக்க பயன்படும் எலி மருந்து பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ஸ்ரீஜா, உடனடியாக அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

பின்னர் இது குறித்து ஸ்ரீஜா ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...