மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவிகள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். 39வது முறையாக போலி மிரட்டல் விடுத்துள்ள மர்ம நபரை கண்டுபிடிக்க சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை:

கோவையில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தொடர்ந்து இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்படும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.



முன்னதாக கோவை பாஸ்போர்ட் அலுவலகம், பள்ளிகள், வணிக வளாகங்கள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பப்பட்டிருந்தன. அதேபோல், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் அடிக்கடி மிரட்டல் இ-மெயில்கள் வந்து வருகின்றன.

நேற்று முன்தினம் மிரட்டல் வந்திருந்த நிலையில், இன்று காலை 7 மணியளவில் மீண்டும் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இ-மெயில் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டது.



இதையடுத்து அதிர்ச்சியடைந்த அலுவலக பணியாளர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மெட்டல் டிடெக்டர் கருவிகள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் முடிவில், இந்த மிரட்டலும் வழக்கம்போல வெறும் புரளி என தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில், தொடர்ந்து இ-மெயில் மூலம் மிரட்டல் அனுப்பி வரும் மர்ம நபரை கண்டறிய சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்னஞ்சல் அனுப்பும் நபர் அடிக்கடி இ-மெயில் முகவரிகளை மாற்றி, வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

அவரை நவீன தொழில்நுட்ப உதவியுடன் அடையாளம் காண போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...