SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. கொங்கு மண்டல மாவட்டங்களில் கோவை 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளது.


கோவை: 2026 மார்ச்/ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற தமிழ்நாடு எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் புதுக்கோட்டை மாவட்டம் 97.57% தேர்ச்சி விகிதத்துடன் மாநில அளவில் முதலிடத்தைப் பெற்றது. சிவகங்கை 97.54 சதவீதம் தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், தஞ்சாவூர் 97.41 சதவீதம் தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

கொங்கு மண்டல மாவட்டங்களில் கோவை மாவட்டம் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் சிறப்பிடம் பிடித்து மாநில அளவில் 7-வது இடத்தை பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 37,844 மாணவர்களில் 36,742 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் 97.03 சதவீதம் தேர்ச்சி விகிதத்தையும், திருப்பூர் 96.28 சதவீதம் தேர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. நீலகிரி மாவட்டம் 96.32 சதவீதம் மற்றும் நாமக்கல் 96.01 சதவீதம் தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன.

சேலம் மாவட்டம் 94.21 சதவீதம் தேர்ச்சியையும், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் முறையே 93.94 சதவீதம் மற்றும் 89.43 சதவீதம் தேர்ச்சி விகிதத்தையும் பதிவு செய்துள்ளன.

மாநிலம் முழுவதும் போலவே, கொங்கு மண்டல மாவட்டங்களிலும் மாணவிகள் தொடர்ந்து மாணவர்களை விட அதிக தேர்ச்சி விகிதம் பெற்று முன்னிலை வகித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.31 சதவீதம் ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவிகள் 96.47 சதவீதம் தேர்ச்சியும், மாணவர்கள் 92.15 சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...