கோவை குண்டுவெடிப்பு கைதி அபுதாஹீர் கைது

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அபுதாஹீர், தலைமறைவாக இருந்து உக்கடம் பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் சி.பி.சி.ஐ போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் அபுதாஹீர் (45). இவர் கோவை குண்டுவெடிப்பில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வெளியே வந்தவர். இந்நிலையில் வெளியே வந்த பின்பு அவர் பணம் மோசடி மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. 

இவர் மீது காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ-டிக்கு மாற்றப்பட்டது. கோவை சி.பி.சி.ஐ போலீசார் அபுதாஹீர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

மேலும் இது தொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அபுதாஹீருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதனை அறிந்ததும் அபுதாஹீர் தலைமறைவானார். 

அவரை சி.பி.சி.ஐபோலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர் குறித்த தகவல்களை ரகசியமாக சேகரித்தனர். அப்போது அவர் உக்கடம் பகுதியில் பதுங்கி இருப்பதாக சி.பி.சி.ஐ போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த அபுதாஹீரை சி.பி.சி.ஐ போலீசார் மே.23 கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...