கோவை குண்டுவெடிப்பு கைதி அபுதாஹீர் கைது

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அபுதாஹீர், தலைமறைவாக இருந்து உக்கடம் பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் சி.பி.சி.ஐ போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் அபுதாஹீர் (45). இவர் கோவை குண்டுவெடிப்பில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வெளியே வந்தவர். இந்நிலையில் வெளியே வந்த பின்பு அவர் பணம் மோசடி மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. 

இவர் மீது காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ-டிக்கு மாற்றப்பட்டது. கோவை சி.பி.சி.ஐ போலீசார் அபுதாஹீர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

மேலும் இது தொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அபுதாஹீருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதனை அறிந்ததும் அபுதாஹீர் தலைமறைவானார். 

அவரை சி.பி.சி.ஐபோலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர் குறித்த தகவல்களை ரகசியமாக சேகரித்தனர். அப்போது அவர் உக்கடம் பகுதியில் பதுங்கி இருப்பதாக சி.பி.சி.ஐ போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் 3 மாதங்களாக தலைமறைவாக இருந்த அபுதாஹீரை சி.பி.சி.ஐ போலீசார் மே.23 கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...