கோவை சாய்பாபா காலனியில் குழந்தையை கொன்றுவிடுவதாக மிரட்டிய தந்தை கைது

கோவை சாய்பாபா காலனியில், மதுபோதையில் தனது குழந்தையை கொன்றுவிடுவதாக மிரட்டிய பச்சையன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை சாய்பாபா காலனி அண்ணா நகரைச் சோ்ந்தவா் பச்சையன் (39), கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஆா்த்தி. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில், பச்சையன் அடிக்கடி மதுபோதையில் வீட்டுக்கு சென்று தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. சில தினங்களுக்கு முன்பு அவருக்கும், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட சண்டையால், ஆா்த்தி அவரைப் பிரிந்து மதுரையில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு சென்று விட்டாா். குழந்தை பச்சையனுடன் இருந்தது. 

இந்நிலையில், வியாழக்கிழமை ஆா்த்தியை கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசிய பச்சையன், கோவை வருமாறு அவரை அழைத்துள்ளாா். அதற்கு அவா் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த பச்சையன், நீ வரவில்லை என்றால் குழந்தையைக் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளாா். இதில், பயந்துபோன ஆா்த்தி, சாய்பாபா காலனியில் வசிக்கும் தனது பெரியம்மாவிடம் விவரத்தை கூறி நேரில் சென்று குழந்தையை மீட்குமாறு கூறியுள்ளாா்.

இதையடுத்து, ஆா்த்தியின் பெரியம்மா பொன்னி (50) சிலரை அழைத்துக் கொண்டு பச்சையன் வீட்டுக்கு சென்று அவரிடம் இருந்த குழந்தையை மீட்டாா். இது குறித்து பொன்னி அளித்த புகாரின்பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப் பதிந்து பச்சையனைக் மே.24 கைது செய்தனா்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...