கோவை சாய்பாபா காலனியில் குழந்தையை கொன்றுவிடுவதாக மிரட்டிய தந்தை கைது

கோவை சாய்பாபா காலனியில், மதுபோதையில் தனது குழந்தையை கொன்றுவிடுவதாக மிரட்டிய பச்சையன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை சாய்பாபா காலனி அண்ணா நகரைச் சோ்ந்தவா் பச்சையன் (39), கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஆா்த்தி. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில், பச்சையன் அடிக்கடி மதுபோதையில் வீட்டுக்கு சென்று தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. சில தினங்களுக்கு முன்பு அவருக்கும், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட சண்டையால், ஆா்த்தி அவரைப் பிரிந்து மதுரையில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்கு சென்று விட்டாா். குழந்தை பச்சையனுடன் இருந்தது. 

இந்நிலையில், வியாழக்கிழமை ஆா்த்தியை கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசிய பச்சையன், கோவை வருமாறு அவரை அழைத்துள்ளாா். அதற்கு அவா் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த பச்சையன், நீ வரவில்லை என்றால் குழந்தையைக் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளாா். இதில், பயந்துபோன ஆா்த்தி, சாய்பாபா காலனியில் வசிக்கும் தனது பெரியம்மாவிடம் விவரத்தை கூறி நேரில் சென்று குழந்தையை மீட்குமாறு கூறியுள்ளாா்.

இதையடுத்து, ஆா்த்தியின் பெரியம்மா பொன்னி (50) சிலரை அழைத்துக் கொண்டு பச்சையன் வீட்டுக்கு சென்று அவரிடம் இருந்த குழந்தையை மீட்டாா். இது குறித்து பொன்னி அளித்த புகாரின்பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப் பதிந்து பச்சையனைக் மே.24 கைது செய்தனா்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...