உடுமலை அருகே சிலந்தை ஆற்றில் தடுப்பணை கட்டும் இடத்தில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் ஆய்வு

தமிழக எல்லைப்பகுதியில் கேரள அரசு சார்பில் சிலந்தை ஆற்றில் தடுப்பணை கட்டும் இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர்கள், தாராபுரம் மடத்துக்குளம் பகுதி விவசாயிகள் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியில் சிலந்தை ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டபடுவதால் கரூர், திருப்பூர் மாவட்டங்களில் பாசன பகுதியும், குடிநீர் தட்டுபாடும் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.



இந்த நிலையில் மாநில தலைமை அறிவுறுத்தல் படி கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுக்கா வட்டவடா ஊராட்சி பகுதியில் உள்ள சிலந்தை ஆற்றில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர்கள், தாராபுரம் மடத்துக்குளம் பகுதி விவசாயிகள் பலர் சென்று ஆய்வு செய்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...