உடுமலை அருகே சிலந்தை ஆற்றில் தடுப்பணை கட்டும் இடத்தில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் ஆய்வு

தமிழக எல்லைப்பகுதியில் கேரள அரசு சார்பில் சிலந்தை ஆற்றில் தடுப்பணை கட்டும் இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர்கள், தாராபுரம் மடத்துக்குளம் பகுதி விவசாயிகள் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியில் சிலந்தை ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டபடுவதால் கரூர், திருப்பூர் மாவட்டங்களில் பாசன பகுதியும், குடிநீர் தட்டுபாடும் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.



இந்த நிலையில் மாநில தலைமை அறிவுறுத்தல் படி கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுக்கா வட்டவடா ஊராட்சி பகுதியில் உள்ள சிலந்தை ஆற்றில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர்கள், தாராபுரம் மடத்துக்குளம் பகுதி விவசாயிகள் பலர் சென்று ஆய்வு செய்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...