கோவை சுகுணாபுரத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா - தொண்டாமுத்தூர் எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி உற்சாக நடனம்

ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் விழாவில் இன்று சக்தி கரகம் மற்றும் தேர் பவனி நடைபெற்றது. இதில் தொண்டாமுத்தூர் எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி பங்கேற்று தேர்பவனியை தொடங்கிவைத்தார். பின்னர் பக்தர்களுடன் அவர் உற்சாகமாக நடனமாடியவாறு ஊர்வலமாகச் சென்றார்.



கோவை: கோவை சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்று வருகிறது.



அதன் ஒருபகுதியாக இன்று ஸ்ரீ சக்தி கரகம், மற்றும் அருள்மிகு ஸ்ரீ சக்திமாரியம்மன் தேர் பவனி இன்று நடைபெற்றது.



இந்த விழாவில் தொண்டாமுத்தூர் எம்எல்ஏ, அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் தேர் பவனியை துவக்கி வைத்து, பக்தர்களுடன் உற்சாக நடனமாடியவாறு ஊர்வலமாக நடந்துசென்றார்.

திருத்தேரானது, பி.கே.புதூர், கோவைபுதூர் பிரிவு, உட்பட பாலக்காடு பிராதன சாலைவழியாக ஊர்வலமாக சென்றது. அருள்மிகு ஸ்ரீ சக்திமாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.



இந்த விழாவில் ஏராளமான பெண்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்தும், முளைப்பாரிகள் எடுத்தும், பூ சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.



இளைஞர்களின் சிலம்பாட்டம் மற்றும் வான வேடிக்கை உடன் சுகுணாபுரம் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...