கோவை சுகுணாபுரத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா - தொண்டாமுத்தூர் எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி உற்சாக நடனம்

ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் விழாவில் இன்று சக்தி கரகம் மற்றும் தேர் பவனி நடைபெற்றது. இதில் தொண்டாமுத்தூர் எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி பங்கேற்று தேர்பவனியை தொடங்கிவைத்தார். பின்னர் பக்தர்களுடன் அவர் உற்சாகமாக நடனமாடியவாறு ஊர்வலமாகச் சென்றார்.



கோவை: கோவை சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்று வருகிறது.



அதன் ஒருபகுதியாக இன்று ஸ்ரீ சக்தி கரகம், மற்றும் அருள்மிகு ஸ்ரீ சக்திமாரியம்மன் தேர் பவனி இன்று நடைபெற்றது.



இந்த விழாவில் தொண்டாமுத்தூர் எம்எல்ஏ, அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் தேர் பவனியை துவக்கி வைத்து, பக்தர்களுடன் உற்சாக நடனமாடியவாறு ஊர்வலமாக நடந்துசென்றார்.

திருத்தேரானது, பி.கே.புதூர், கோவைபுதூர் பிரிவு, உட்பட பாலக்காடு பிராதன சாலைவழியாக ஊர்வலமாக சென்றது. அருள்மிகு ஸ்ரீ சக்திமாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.



இந்த விழாவில் ஏராளமான பெண்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்தும், முளைப்பாரிகள் எடுத்தும், பூ சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.



இளைஞர்களின் சிலம்பாட்டம் மற்றும் வான வேடிக்கை உடன் சுகுணாபுரம் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...