உடுமலை அருகே தமிழக கேரள எல்லை காந்தளூரில் கோடை விழா துவக்கம் - பாரம்பரிய நடனமாடி மலைவாழ் மக்கள் அசத்தல்

கோடை விழாவில் இடம்பெற்ற மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய உணவு தானியங்களின் ஸ்டால் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டம் காந்தளூர் இன்று உலகளவில் சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது. கடந்த வருடம் சிறந்த சுற்றுலா தளத்திற்கான விருதும் பெற்றது. இந்நிலையில் இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

இப்போது கோடை விடுமுறை என்பதால் கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குவிக்கின்றனர்.

இங்கு சந்தனக்காடு, இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சி, கச்சாரம் நீர்வீழ்ச்சி, பிரம்ரம் வியூ பாயிண்ட், குளிர்கால பழம் பச்சை கறி தோட்டங்கள் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள நிலையில் தினசரி சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிக்கிறது. இதையடுத்து காந்தலூர் ஃபெஸ்ட் கோடை திருவிழா நேற்று முதல் தொடங்கியது இந்தக் கோடை விழா இரண்டாம் வருடம் நடத்தப்படுகிறது.

கோடை விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவு தானியங்களின் ஸ்டால் உள்பட கோடை விழாவில் அமைக்கப்பட்டுள்ளது.



நேற்று முதல் தொடங்கிய கோடை விழாவை கேரளா வருவாய்த்துறை மந்திரி கே.ராஜன் தொடங்கி வைத்தார்.

தேவிகுளம் எம்எல்ஏ ஏ.ராஜா, காந்தளூர் பஞ்சாயத்து தலைவர் பி.டி. மோகன்தாஸ், கோடை விழா கூட்டமைப்பு உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். மேலும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...