உடுமலை அருகே தமிழக கேரள எல்லை காந்தளூரில் கோடை விழா துவக்கம் - பாரம்பரிய நடனமாடி மலைவாழ் மக்கள் அசத்தல்

கோடை விழாவில் இடம்பெற்ற மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய உணவு தானியங்களின் ஸ்டால் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டம் காந்தளூர் இன்று உலகளவில் சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது. கடந்த வருடம் சிறந்த சுற்றுலா தளத்திற்கான விருதும் பெற்றது. இந்நிலையில் இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

இப்போது கோடை விடுமுறை என்பதால் கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குவிக்கின்றனர்.

இங்கு சந்தனக்காடு, இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சி, கச்சாரம் நீர்வீழ்ச்சி, பிரம்ரம் வியூ பாயிண்ட், குளிர்கால பழம் பச்சை கறி தோட்டங்கள் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள நிலையில் தினசரி சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிக்கிறது. இதையடுத்து காந்தலூர் ஃபெஸ்ட் கோடை திருவிழா நேற்று முதல் தொடங்கியது இந்தக் கோடை விழா இரண்டாம் வருடம் நடத்தப்படுகிறது.

கோடை விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவு தானியங்களின் ஸ்டால் உள்பட கோடை விழாவில் அமைக்கப்பட்டுள்ளது.



நேற்று முதல் தொடங்கிய கோடை விழாவை கேரளா வருவாய்த்துறை மந்திரி கே.ராஜன் தொடங்கி வைத்தார்.

தேவிகுளம் எம்எல்ஏ ஏ.ராஜா, காந்தளூர் பஞ்சாயத்து தலைவர் பி.டி. மோகன்தாஸ், கோடை விழா கூட்டமைப்பு உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். மேலும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.

Newsletter

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...