வால்பாறை அருகே ஊசிமலை எஸ்டேட் பகுதியில் முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அறக்கட்டளை சார்பில் கால்பந்து போட்டி

கருமலை பள்ளி முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அறக்கட்டளை சார்பாக முதலாம் ஆண்டு கால்பந்து போட்டி ஊசிமலை எஸ்டேட் பகுதியில் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் மிக பழமையான பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படித்த மாணவ, மாணவர்கள் நீதிபதியாகவும், வழக்கறிஞராகவும், மருத்துவராகவும், உயர் அரசு பதவிகளில் வகித்து வருகிறார்கள். இங்கு படித்த மாணவ, மாணவியர்கள் இந்த அறக்கட்டளை தலைவர் எம்.மாதவன், செயலாளர் எஸ்.சிங்கார முத்து, பொருளாளர் பி.ருக்குமணி ஆகியோர்கள் whatsapp குழு மூலம் இணைந்து கருமலை பள்ளி முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அறக்கட்டளை அமைக்கப்பட்டு இந்த அறக்கட்டளை சார்பாக முதலாம் ஆண்டு ஊசிமலை எஸ்டேட் பகுதியில் கால்பந்து போட்டி நடைபெற்றது.

கால்பந்து போட்டியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாணவர் மருத்துவர் துரைக்கண்ணன் செயலாளர், எஸ்டேட் மேலாளர் செல்வராஜ், அன்பு சேகர் அன்புராஜ், ஊசிமலை எஸ்டேட் ஒர்க்கர்ஸ் கமிட்டி பழனிச்சாமி, வால்பாறை சிடி செல்வகுமார், முகமது கனி, செல்வகுமார், ஆமோஸ் பரமசிவம், சௌந்தர்ராஜ், ஜான் சரவணன் மற்றும் ஊசிமலை முன்னாள் ஆசிரியர் கலைமணி, இந்நாள் ஆசிரியர் உதயகுமார், குட்வின் ஆசிரியர் மற்றும் அமுதா, எஸ்டேட் பொதுமக்கள் கலந்துகொண்டு பெரியவர்கள், குழந்தைகள் என்று கால்பந்து போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் பரிசுகளும் வழங்கி சிறப்பித்தனர்.



இந்த அறக்கட்டளையின் தலைவர் மாதவன் கூறுகையில் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி இந்த முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் அறக்கட்டளை துவக்கப்பட்டு உள்ளது. கருமலை பகுதியில் இருந்து வெளியூர் சென்ற மக்களுக்கும், கருமலை பகுதியில் படிக்கும் பள்ளி மாணவ, மாணவர்களுக்கும் உதவி செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. பள்ளி குழந்தைகளுக்கு தேவையான உதவிகளும், மருத்துவ உதவிகளும் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...