வால்பாறை அருகே ஊசிமலை எஸ்டேட் பகுதியில் முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அறக்கட்டளை சார்பில் கால்பந்து போட்டி

கருமலை பள்ளி முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அறக்கட்டளை சார்பாக முதலாம் ஆண்டு கால்பந்து போட்டி ஊசிமலை எஸ்டேட் பகுதியில் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் மிக பழமையான பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படித்த மாணவ, மாணவர்கள் நீதிபதியாகவும், வழக்கறிஞராகவும், மருத்துவராகவும், உயர் அரசு பதவிகளில் வகித்து வருகிறார்கள். இங்கு படித்த மாணவ, மாணவியர்கள் இந்த அறக்கட்டளை தலைவர் எம்.மாதவன், செயலாளர் எஸ்.சிங்கார முத்து, பொருளாளர் பி.ருக்குமணி ஆகியோர்கள் whatsapp குழு மூலம் இணைந்து கருமலை பள்ளி முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அறக்கட்டளை அமைக்கப்பட்டு இந்த அறக்கட்டளை சார்பாக முதலாம் ஆண்டு ஊசிமலை எஸ்டேட் பகுதியில் கால்பந்து போட்டி நடைபெற்றது.

கால்பந்து போட்டியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாணவர் மருத்துவர் துரைக்கண்ணன் செயலாளர், எஸ்டேட் மேலாளர் செல்வராஜ், அன்பு சேகர் அன்புராஜ், ஊசிமலை எஸ்டேட் ஒர்க்கர்ஸ் கமிட்டி பழனிச்சாமி, வால்பாறை சிடி செல்வகுமார், முகமது கனி, செல்வகுமார், ஆமோஸ் பரமசிவம், சௌந்தர்ராஜ், ஜான் சரவணன் மற்றும் ஊசிமலை முன்னாள் ஆசிரியர் கலைமணி, இந்நாள் ஆசிரியர் உதயகுமார், குட்வின் ஆசிரியர் மற்றும் அமுதா, எஸ்டேட் பொதுமக்கள் கலந்துகொண்டு பெரியவர்கள், குழந்தைகள் என்று கால்பந்து போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் பரிசுகளும் வழங்கி சிறப்பித்தனர்.



இந்த அறக்கட்டளையின் தலைவர் மாதவன் கூறுகையில் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நலன் கருதி இந்த முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் அறக்கட்டளை துவக்கப்பட்டு உள்ளது. கருமலை பகுதியில் இருந்து வெளியூர் சென்ற மக்களுக்கும், கருமலை பகுதியில் படிக்கும் பள்ளி மாணவ, மாணவர்களுக்கும் உதவி செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. பள்ளி குழந்தைகளுக்கு தேவையான உதவிகளும், மருத்துவ உதவிகளும் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...