துடியலூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாட்டம்

மே தின விழாவில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் பங்கேற்று தொழிற்சங்க கொடியினை ஏற்றி வைத்தார். அப்போது மே தினம் வாழ்க, தொழிலாளர் தினம் வாழ்க என நிர்வாகிகள் கோசங்கள் எழுப்பினர்.


கோவை: கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு அண்ணா தொழிற்சங்க துடியலூர் பகுதி செயலாளர் வி.ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். 2வது வட்ட கழக செயலாளர் ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். 1வது வட்ட கழக செயலாளர் சாந்திபூஷன் முன்னிலை வகித்தார்.



சிறப்பு விருந்தினர்களாக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார், கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ ஒ.கே.சின்னராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டு தொழிற்சங்க கொடி ஏற்றினர்.

அப்போது மே தினம் வாழ்க, தொழிலாளர் தினம் வாழ்க என கோசங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் தொழிற்சங்க தலைவர் கண்ணதாசன், அம்மா பேரவை செயலாளர் கவிசந்திரமோகன், பகுதி துணை செயலாளர் சரவண பாண்டியன், துடியலூர் தொழிற் நுட்ப பிரிவு செயலாளர் கெளதம், 14வது வட்ட கழக செயலாளர் பந்தல்வீடு பிரகாஷ், 2ஏ வட்ட கழக செயலாலர் காளிச்சாமி, 15ஏ வட்ட கழக செயலாளர் சுரேஷ்பாபு, முன்னாள் நகர செயலாளர் மோகன்ராஜ், 1வது வட்ட பொருளாளர் ராஜகோபால், 1வது வட்ட கழக வர்த்தக அணி செயலாளர் முத்து, முன்னாள் கிளை செயலாளர் சரவணன், 1வது வட்ட கழக துணை செயலாளர் சுசிலா, முன்னாள் துணை செயலாளர் ராஜாத்தி, 14வது வார்டு நடராஜன், கழக உறுப்பினர் விஜயா உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.



அதனையடுத்து தேசிய பட்டியல் இன மக்கள் இயக்கம் சார்பாக மே தின விழா துடியலூரில் கொண்டாடப்பட்டது. இதில் அம்பேத்கர் படத்திற்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் மலர்கள் தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு நோட்டுபுத்தகங்கள், மாற்றுத்திறனாளி மக்களுக்கு அரிசி பைகள், பெண்களுக்கு சேலைகள், ஆண்களுக்கு சர்ட்டுகள் வழங்கினார். இந்த விழாவில் அதிமுக கட்சி நிர்வாகிகள், தேசிய பட்டியல் இன மக்கள் இயக்கத்தினர், பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...