ஒடிசா வாலிபர் கைது: கோவையில் கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் பறிமுதல்

பிரியரஞ்சன் சாஹூ (26) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்


Coimbatore: கோவை, செட்டிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினருக்கு இன்று (ஏப்.29) ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன் பேரில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் மலுமிச்சம்பட்டி - போடிபாளையம் சாலை அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். 

அப்போது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரியரஞ்சன் சாஹூ (26) என்பவர் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. 

பின்னர் பிரியரஞ்சன் சாஹூ (26) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இதேபோல, சூலூர் காவல் துறையினருக்கு, காடம்பாடி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சூலூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் இன்று ஏப்ரல்.29 கிடைத்தது. 



அதன் பேரில் உடனே அங்கு சென்ற சூலூர் போலீசார், சோதனை செய்தபோது காடம்பாடி பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜபாபு சஹானி (30) மற்றும் விஜய் சஹானி(31) ஆகியோரை கைது செய்தனர். 



பின்னர் அவர்களிடமிருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

அதேபோல, மதுக்கரை பகுதியில் உயர் ரக போதை பொருளான மெத்தபெட்டமைன் விற்பனைக்கு வைத்திருப்பதாக மதுக்கரை போலீசாருக்கு இன்று ஏப்ரல்.29 ரகசிய தகவல் கிடைத்தது.



அதன் அடிப்படையில் மதுக்கரை போலீசார் உடனே அங்கு சென்று சோதனை மேற்கொண்ட போது உயர்ரக போதை பொருள் வைத்திருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த திவாகர் (23) என்பவரை கைது செய்தனர். 

பின்னர் அவரிடமிருந்து 5.750 கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...