கோவையில் 1192 மது பாட்டில்கள் மற்றும் ரூ.1.07 லட்சம் பறிமுதல் - 11 பேர் கைது

வடவள்ளி வீரகேரளம், போத்தனூர், சுந்தராபுரம், சிங்காநல்லூர், பீளமேடு ஆகிய பகுதிகளில் மாநகர போலீசாரும், மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரும் நடத்திய சோதனையில் மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு, 1192 மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 1.07 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மக்களவை தேர்தலையொட்டி கடந்த 17,18,19 ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்தி சிலர் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து மாநகர போலீசார், மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கோவை மாநகரில் நேற்று (ஏப்ரல்.19) பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர்.

அப்போது வடவள்ளி வீரகேரளம் டாஸ்மாக் கடை அருகே சென்ற போது ஒரு கும்பல் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து ஒரு குவார்ட்டர் பாட்டில் ரூ.250 முதல் 300 வரை விற்றது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பார் சப்ளையர்கள் சிவகங்கையை சேர்ந்த ராஜா(28), மருதுபாண்டி(27), விருது நகரை சேர்ந்த தமிழ்செல்வன்(27), புதுக்கோட்டையை சேர்ந்த செபாஸ்டியன்(42), கிருஷ்ணன்(41), ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 844 மது பாட்டில்கள் மற்றும் ரூ.1.07 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல, போத்தனூர், சுந்தராபுரம், சிங்காநல்லூர், பீளமேடு மற்றும் மது விலக்கு அமல்பிரிவு போலீசார் புதுக்கோட்டையை சேர்ந்த விக்னேஷ்வரன்(31), வீரசேகரன்(42), அன்புகுமார்(44), மகாலிங்கம்(27), கடலூரை சேர்ந்த சுகுமார்(29), கோவை பிள்ளையார் புரத்தை சேர்ந்த அன்புதுரை(32), ஆகிய 6 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 348 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் போலீசார் 11 பேரை கைது செய்து 1192 மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 1.07 லட்சத்தை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...