தாராபுரத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றிய போலீசாருக்கு பாராட்டு

உயிருக்கு போராடியவரை காப்பாற்றிய இரண்டு போலீசாரையும் நேரில் அழைத்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானீஸ்வரி பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்தில் கடந்த 14ம் தேதி இரவு 9 மணிக்கு பேருந்துக்காக காத்திருந்த நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் பழனி(36) என்பவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

இதனைப்பார்த்த தாராபுரம் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கோபால் மற்றும் நந்தகோபால் ஆகியோர் மயங்கி விழுந்தவரை CPR முதலுதவி சிகிச்சை செய்து அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உயிரை காப்பாற்றினர்.



இந்த மனிதநேயமிக்க செயலை பாராட்டும் வகையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானீஸ்வரி இன்று (16.04.2024) மேற்படி இருவரையும் மேற்கு மண்டல காவல் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

Newsletter

T20 உலகக்கோப்பை வீரர் சஞ்சு சாம்சன் கோவை ADISSIA நிறுவனத்தின் Brand Ambassador ஆனார்

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், கோவையைச் சேர...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...