விருகல்பட்டி கூட்டுறவு வங்கியில் முறைகேடு – நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கபோவதாக விவசாயிகள் அறிவிப்பு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விருகல்பட்டி ஊராட்சியில் கருப்பு கொடி ஏற்றி, தேர்தலை புறக்கணிக்க போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே விருகல்பட்டி ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்ட தலைவர், இயக்குனர்கள், செயலர் உதவி செயலாளர் ஆகியோர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருகல்பட்டி மற்றும் ராமச்சந்திராபுரம் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடக்க வேளாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டம், ஆடு மாடுகளுடன் போராட்டம், சாலை மறியல் என பல்வேறு கட்ட போராட்டங்கள் செய்தும் தற்பொழுது வரை எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கப்படவில்லை.



இதனால் தமிழக அரசை கண்டித்தும், மறு பயிர் கடன் வழங்காத்தை கண்டித்தும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விருகல்பட்டி ஊராட்சியில் கருப்பு கொடி ஏற்றினர். பின்னர் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்தனர். அப்போது தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் இடப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...