கோவையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வாக்களிக்க வாகன வசதி ஏற்பாடு

வாகனம் உதவி தேவைப்படுவோர் 7397700482 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயரை (17.04.2024) அன்று மாலை 6.00 மணிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு கோவை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிராந்திகுமார் பாடிநேற்று ஏப்ரல்.12 வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 19.04.2024 அன்று நடைபெறும் மக்களவை பொதுத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் 100 விழுக்காடு வாக்களிக்க ஏதுவாக ஸ்வர்கா பவுண்டடேசன், எம்.கே பவுண்டேசன், கோயம்புத்தூர் ஆகிய தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் தங்களுக்குரிய வாக்குசாவடிகளில் வாக்களிக்க ஏதுவாக வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாகனம் உதவி தேவைப்படுவோர்7397700482 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயரை (17.04.2024) அன்று மாலை 6.00 மணிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறும், இந்த வாய்பினை பயன்படுத்தி கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவரும் வாக்களித்து ஜனநாயக உரிமையை நிலைநாட்டிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...