கோவையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வாக்களிக்க வாகன வசதி ஏற்பாடு

வாகனம் உதவி தேவைப்படுவோர் 7397700482 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயரை (17.04.2024) அன்று மாலை 6.00 மணிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு கோவை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிராந்திகுமார் பாடிநேற்று ஏப்ரல்.12 வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 19.04.2024 அன்று நடைபெறும் மக்களவை பொதுத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் 100 விழுக்காடு வாக்களிக்க ஏதுவாக ஸ்வர்கா பவுண்டடேசன், எம்.கே பவுண்டேசன், கோயம்புத்தூர் ஆகிய தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் தங்களுக்குரிய வாக்குசாவடிகளில் வாக்களிக்க ஏதுவாக வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாகனம் உதவி தேவைப்படுவோர்7397700482 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயரை (17.04.2024) அன்று மாலை 6.00 மணிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறும், இந்த வாய்பினை பயன்படுத்தி கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவரும் வாக்களித்து ஜனநாயக உரிமையை நிலைநாட்டிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...