பெண்களுக்கு உலக அளவில் கௌரவம் அளித்தது மோடி அரசு தான் - பெருந்துறையில் வானதி சீனிவாசன் பரப்புரை

மத்திய அரசின் மானியம் மோடி ஆட்சியில் எந்த இடைத்தரகரும் இல்லாமல் மக்கள், பெண்கள், விவசாயிகள், வியாபாரிகள் ஆகியோரின் வங்கி கணக்குக்கு நேரடியாக சேர்கிறது என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.


ஈரோடு: திருப்பூர் பாராளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் A. P. முருகானந்தம் அவர்களை ஆதரித்து பெருந்துறை சட்டமன்ற தொகுதி, குன்னத்தூரில் இன்று (ஏப்ரல்.11) கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தேர்தல் பரப்பரை மேற்கொண்டார்.



அப்போது பேசிய அவர், திருப்பூர் மக்கள் முந்தைய தேர்தல்களில் பாஜக M.P. தரவிட்டாலும், நம் மோடி அரசு பாரபட்சம் பாராமல் பல கோடிக்கணக்கான ரூபாய் அளவில் ESI மருத்துவமனை, வீடுகட்டும் திட்டம், குடிநீர் திட்டம், கழிப்பறைகள், குறைந்த விலையில் மக்கள் மருந்தகம், வேலைத் திறன் மேம்பட இளைஞர்களுக்கு திறன் சார்ந்த பயிற்சி, பாதாள சாக்கடை உட்பட ஸ்மார்ட் சிட்டி திட்டம், கொரானா சமயத்தில் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு நேரடி நிதி மானியம் அளித்தது.

பெண்கள் பெருமை கொள்ளும் வகையில், பெண்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வண்ணம் இந்த வருடம் நடந்த குடியரசு தின விழாவில் எண்ணற்ற பெண்கள் குழுக்களை அணிவகுக்க செய்ய வைத்து பெண்களுக்கு உலக அளவில் கௌரவம் அளித்தது மோடி அரசு.



மத்திய அரசின் மானியம் மோடி ஆட்சியில் எந்த இடைத்தரகரும் இல்லாமல் மக்கள் - பெண்கள், விவசாயிகள், வியாபாரிகள் வங்கி கணக்குக்கு நேரடியாக கொடுத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களை அறிந்த மக்கள் திருப்பூர் பாராளுமன்ற தொகுதியை பாஜகவின் வெற்றி தொகுதியாக மாற்றுவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறி வாக்கு சேகரித்தார். உடன் பாஜக நிர்வாகிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...