பெண்களுக்கு உலக அளவில் கௌரவம் அளித்தது மோடி அரசு தான் - பெருந்துறையில் வானதி சீனிவாசன் பரப்புரை

மத்திய அரசின் மானியம் மோடி ஆட்சியில் எந்த இடைத்தரகரும் இல்லாமல் மக்கள், பெண்கள், விவசாயிகள், வியாபாரிகள் ஆகியோரின் வங்கி கணக்குக்கு நேரடியாக சேர்கிறது என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.


ஈரோடு: திருப்பூர் பாராளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் A. P. முருகானந்தம் அவர்களை ஆதரித்து பெருந்துறை சட்டமன்ற தொகுதி, குன்னத்தூரில் இன்று (ஏப்ரல்.11) கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தேர்தல் பரப்பரை மேற்கொண்டார்.



அப்போது பேசிய அவர், திருப்பூர் மக்கள் முந்தைய தேர்தல்களில் பாஜக M.P. தரவிட்டாலும், நம் மோடி அரசு பாரபட்சம் பாராமல் பல கோடிக்கணக்கான ரூபாய் அளவில் ESI மருத்துவமனை, வீடுகட்டும் திட்டம், குடிநீர் திட்டம், கழிப்பறைகள், குறைந்த விலையில் மக்கள் மருந்தகம், வேலைத் திறன் மேம்பட இளைஞர்களுக்கு திறன் சார்ந்த பயிற்சி, பாதாள சாக்கடை உட்பட ஸ்மார்ட் சிட்டி திட்டம், கொரானா சமயத்தில் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு நேரடி நிதி மானியம் அளித்தது.

பெண்கள் பெருமை கொள்ளும் வகையில், பெண்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வண்ணம் இந்த வருடம் நடந்த குடியரசு தின விழாவில் எண்ணற்ற பெண்கள் குழுக்களை அணிவகுக்க செய்ய வைத்து பெண்களுக்கு உலக அளவில் கௌரவம் அளித்தது மோடி அரசு.



மத்திய அரசின் மானியம் மோடி ஆட்சியில் எந்த இடைத்தரகரும் இல்லாமல் மக்கள் - பெண்கள், விவசாயிகள், வியாபாரிகள் வங்கி கணக்குக்கு நேரடியாக கொடுத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களை அறிந்த மக்கள் திருப்பூர் பாராளுமன்ற தொகுதியை பாஜகவின் வெற்றி தொகுதியாக மாற்றுவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறி வாக்கு சேகரித்தார். உடன் பாஜக நிர்வாகிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...