பெண்களுக்கு உலக அளவில் கௌரவம் அளித்தது மோடி அரசு தான் - பெருந்துறையில் வானதி சீனிவாசன் பரப்புரை

மத்திய அரசின் மானியம் மோடி ஆட்சியில் எந்த இடைத்தரகரும் இல்லாமல் மக்கள், பெண்கள், விவசாயிகள், வியாபாரிகள் ஆகியோரின் வங்கி கணக்குக்கு நேரடியாக சேர்கிறது என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.


ஈரோடு: திருப்பூர் பாராளுமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளர் A. P. முருகானந்தம் அவர்களை ஆதரித்து பெருந்துறை சட்டமன்ற தொகுதி, குன்னத்தூரில் இன்று (ஏப்ரல்.11) கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தேர்தல் பரப்பரை மேற்கொண்டார்.



அப்போது பேசிய அவர், திருப்பூர் மக்கள் முந்தைய தேர்தல்களில் பாஜக M.P. தரவிட்டாலும், நம் மோடி அரசு பாரபட்சம் பாராமல் பல கோடிக்கணக்கான ரூபாய் அளவில் ESI மருத்துவமனை, வீடுகட்டும் திட்டம், குடிநீர் திட்டம், கழிப்பறைகள், குறைந்த விலையில் மக்கள் மருந்தகம், வேலைத் திறன் மேம்பட இளைஞர்களுக்கு திறன் சார்ந்த பயிற்சி, பாதாள சாக்கடை உட்பட ஸ்மார்ட் சிட்டி திட்டம், கொரானா சமயத்தில் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு நேரடி நிதி மானியம் அளித்தது.

பெண்கள் பெருமை கொள்ளும் வகையில், பெண்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வண்ணம் இந்த வருடம் நடந்த குடியரசு தின விழாவில் எண்ணற்ற பெண்கள் குழுக்களை அணிவகுக்க செய்ய வைத்து பெண்களுக்கு உலக அளவில் கௌரவம் அளித்தது மோடி அரசு.



மத்திய அரசின் மானியம் மோடி ஆட்சியில் எந்த இடைத்தரகரும் இல்லாமல் மக்கள் - பெண்கள், விவசாயிகள், வியாபாரிகள் வங்கி கணக்குக்கு நேரடியாக கொடுத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களை அறிந்த மக்கள் திருப்பூர் பாராளுமன்ற தொகுதியை பாஜகவின் வெற்றி தொகுதியாக மாற்றுவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறி வாக்கு சேகரித்தார். உடன் பாஜக நிர்வாகிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...