திருப்பூரில் நீண்ட வரிசையில் நின்று பிரியாணி வாங்க அலைமோதிய கூட்டம்-15 டன் பிரியாணி ஒரே நாளில் விற்பனை

வழக்கமாக 50 கடைகளையும் சேர்த்து 5 டன் அளவில் மட்டுமே பிரியாணி விற்பனையாகும் நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் மூன்று மடங்கு அதிகமாக 15 டன் பிரியாணி விற்பனையானதாக கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் ரம்ஜான் தினமான இன்று காங்கேயம் கிராஸ் சாலையில் உள்ள 50க்கும் மேற்பட்ட பிரியாணி கடைகளில் கூட்டம் அலைமோதியது. ரம்ஜான் தினத்தன்று அனைத்து தரப்பு மக்களும் பிரியாணி உண்ணும் ஆசையில் ஏராளமான கடைகளில் பிரியாணி வாங்க திரண்டதால் ஏராளமான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதன் காரணமாக காங்கேயம் கிராஸ் சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் பிரபல பிரியாணி கடைகளில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் பிரியாணி வாங்கி சென்றனர். வழக்கமாக அப்பகுதியில் உள்ள 50 கடைகளுக்கும் சேர்த்து 5 டன் அளவில் மட்டுமே பிரியாணி விற்பனையாகும் நிலையில் இன்று ஒரே நாளில் மூன்று மடங்கு அதிகமாக 15 டன் பிரியாணி விற்பனையானதாக கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...