வடவள்ளி பகுதியில் செல்பி எடுத்ததை காட்டி பெண்னை பாலியல் உறவுக்கு அழைத்த நபர் கைது..!

வடவள்ளி பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் அவரது கடை அருகே இருந்த பெண்ணிடம், செல்ஃபி புகைபடத்தை காட்டி பாலியல் உறவுக்கு வருமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார். விசாரணையில், அவர் மீது வழக்கு தொடர்ந்த போலீசார் அவரை கைது செய்தனர்.


கோவை : கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி.. இவர் அப்பகுதியில் டீக் கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் எதிரே 46 வயது பெண் ஒருவர் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு கருப்பசாமி, அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினருடன் செல்பி எடுத்துள்ளார்.

இந்த நிலையில்,இருவரும் சேர்ந்து எடுத்த செல்பி போட்டோவை அந்த பெண்ணிடம் காட்டி பாலியல் உறவுக்கு வருமாறு அழைத்து கருப்பசாமி டார்ச்சர் கொடுத்துள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து கருப்பசாமியை கண்டித்து வந்துள்ளார்.

இதற்கிடையே அந்த பெண் தனது கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது,அங்கு வந்த கருப்பசாமி அவரிடம் மீண்டும் தகராறு செய்து தகாத வார்த்தைகளால் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது . சம்பவம் குறித்து அப்பெண் வடவள்ளிகாவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...