கோவையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வாங்க குவிந்த இஸ்லாமியர்கள்..!

உக்கடம், கோட்டைமேடு, கரும்புக்கடை, குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் இஸ்லாமியர்கள் புத்தாடைகள் வாங்குவதற்காக குவிந்துள்ளதால் ரம்ஜான் பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது.


கோவை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவை கரும்புகடை, கோட்டைமேடு பகுதியில் புத்தாடைகள் வாங்க பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் குவிந்துள்ளனர்.

முதன் முதலில் ஆல்குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூரும் விதமாக நோன்பு வைத்து இஸ்லாமிய மக்கள் கொண்டாடுவது வழக்கம். அதனை தொடர்ந்து இந்த மாதத்தில் பெரும்பாலான இஸ்லாமியர்கள் உண்ணாவிரதம் இருந்து நோன்பு வைத்து பல்வேறு சிறப்பு தொழுகைகளுக்குப் பிறகு நோன்பு வைப்பார்கள். 30 நாட்களுக்குப் பிறகு நோன்பு முடிந்து ரம்ஜான் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.



இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை போற்றும் வகையில், கோவையில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியான உக்கடம், கோட்டைமேடு, கரும்புக்கடை, குனியமுத்தூர் ஆகிய பகுதியில் இஸ்லாமியர்கள் புத்தாடைகள் வாங்குவதற்காக குவிந்துள்ளனர்.



அதேபோல், புத்தாடை வாங்கும் ஜவுளிக் கடைகளில் குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது.



புத்தாடைகள் வாங்கும் போது, பெற்றோர்கள் விளையாட்டு உபகரணங்களில் தங்கள் குழந்தைகளை விளையாட வைத்து மகிழ்வித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...