கோவையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வாங்க குவிந்த இஸ்லாமியர்கள்..!

உக்கடம், கோட்டைமேடு, கரும்புக்கடை, குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் இஸ்லாமியர்கள் புத்தாடைகள் வாங்குவதற்காக குவிந்துள்ளதால் ரம்ஜான் பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது.


கோவை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவை கரும்புகடை, கோட்டைமேடு பகுதியில் புத்தாடைகள் வாங்க பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் குவிந்துள்ளனர்.

முதன் முதலில் ஆல்குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூரும் விதமாக நோன்பு வைத்து இஸ்லாமிய மக்கள் கொண்டாடுவது வழக்கம். அதனை தொடர்ந்து இந்த மாதத்தில் பெரும்பாலான இஸ்லாமியர்கள் உண்ணாவிரதம் இருந்து நோன்பு வைத்து பல்வேறு சிறப்பு தொழுகைகளுக்குப் பிறகு நோன்பு வைப்பார்கள். 30 நாட்களுக்குப் பிறகு நோன்பு முடிந்து ரம்ஜான் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.



இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை போற்றும் வகையில், கோவையில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியான உக்கடம், கோட்டைமேடு, கரும்புக்கடை, குனியமுத்தூர் ஆகிய பகுதியில் இஸ்லாமியர்கள் புத்தாடைகள் வாங்குவதற்காக குவிந்துள்ளனர்.



அதேபோல், புத்தாடை வாங்கும் ஜவுளிக் கடைகளில் குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது.



புத்தாடைகள் வாங்கும் போது, பெற்றோர்கள் விளையாட்டு உபகரணங்களில் தங்கள் குழந்தைகளை விளையாட வைத்து மகிழ்வித்தனர்.

Newsletter

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...